மேக்னசைட் நிறுவனத்தை மூட சதி? புதிய அரசுக்கு எச்சரிக்கை!
28 May 2026, 11:04 pm
<p><strong>மேக்னசைட் நிறுவனத்தை மூட சதி? புதிய அரசுக்கு எச்சரிக்கை!</strong></p><p>சேலம், மே 28- லாபத்தில் இயங்கும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை, நஷ்டத் திலுள்ள கனிம வள நிறுவனத்துடன் இணைக்க முயன்றால் தொழிலா ளர்களை திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பு எச்சரித்துள் ளது. </p><p>இது தொடர்பாக, தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை காப்பதற் கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நல்லமுத்து சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: கடந்த 1979-இல் அரசு டைமையாக்கப்பட்ட தமிழ்நாடு மேக் னசைட் நிறுவனம், தொழிலாளர்க ளின் உழைப்பால் ஆண்டுக்கு ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை லாபகரமாக இயங்கி வந்தது. </p><p>நாட் டின் 90 சதவீத மேக்னசைட் சேலத்தில் தான் கிடைக்கிறது. </p><p>இத்தகைய சிறப்புமிக்க நிறுவனத்தை, தற்போ தைய நஷ்டத்தில் இயங்கும் தமிழ் நாடு கனிம வள நிறுவனத்துடன் இணைக்க அதிகாரிகள் மூலம் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதாக தெரிகிறது. </p><p>இவ்வாறு இணைத்தால் மேக்ன சைட் நிறுவனம் நலிவடைந்து மூடப் படும் அபாயமும், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து அவர்க ளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகும் சூழலும் ஏற்படும்.</p><p> புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, கனிம வள அதிகாரிக ளின் பேச்சைக் கேட்டு தொழிலாளர் நலனுக்கு எதிராக செயல்படக் கூடாது. </p><p>இவ்விவகாரம் தொடர்பாக கனிமவளத்துறை அமைச்சரை சந் திக்க நேரம் கேட்டுள்ளோம்.</p><p> புதிய அரசு தொழிலாளர்களின் நலனைக் காக்கும் என நம்புகிறோம். மாறாக, கனிம வள நிறுவனத்துடன் இணைக் கும் முயற்சியைத் தொடர்ந்தால், அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்துப் போராடுவோம், என் றார்.</p>
