தமிழ்நாட்டில் வெப்ப அலை நீடிக்கும் ; மழைக்கும் வாய்ப்பு
22 May 2026, 9:19 pm
<p><strong>தமிழ்நாட்டில் வெப்ப அலை நீடிக்கும் ; மழைக்கும் வாய்ப்பு</strong></p><p>சென்னை, மே 22- தமிழகத்தில் கடுமையான வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து நீடித்து வருகிறது.</p><p> இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, மாநிலத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 39 டிகிரி செல்ஸியஸ் அளவை தாண்டியுள்ளது. </p><p>சென்னையில் கடந்த புதன்கிழமை 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது; இது இந்த கோடைகாலத்தின் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.</p><p>இந்த கடுமையான வெப்ப நிலை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. </p><p>சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வெப்ப அலை நீடிக்கக்கூடும். பகல் நேரங்களில் அதிகப்படியான வெப்பநிலையுடன் காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் என்பதால், இப்பகுதிகளில் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடும். </p><p>வெயிலின் தாக்கம் நீடித்தாலும், மே 23 முதல் மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையும், மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
