தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

10 May 2026, 11:22 pm
திருச்சி விரைவு செய்திகள்
<p><strong>கோணம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்</strong> </p><p>நாகர்கோவில்,மே 10- நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பெறப்படும். கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் வருகிற 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<strong> </strong></p><p><strong>தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை</strong></p><p><strong> </strong>தூத்துக்குடி, மே 10- தூத்துக்குடியில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிறன்று அதிகாலை 5:30 மணியளவில் வந்தது. தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் பகுதி யில் உள்ள தண்டவாளப் பகுதியில் வந்த போது, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென ரயிலின் முன் பாய்ந்து உள்ளார். இதில் ரயிலில் அடிபட்ட அந்த நபர் சம்பவ இடத்தி லேயே உடல் சிதைந்து உயிரிழந்தார். இது குறித்து ரயிலின் லோகோ பைலட் அளித்த தகவ லின் பேரில், ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர் சுமார் 50 மதிக்கத்தக்க ஆண் ஆவார். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியும், இதுவரை அந்த நபர் யார் என்பது குறித்த விபரங்கள் கிடைக்க வில்லை. இது குறித்து ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p><strong>மினி வேனில் கடத்தப்பட்ட 1,250 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது</strong> </p><p>தூத்துக்குடி, மே 10- கோவில்பட்டியில் மினி வேன் மூலம் கடத்த முயன்ற சுமார் 1,250 கிலோ ரேசன் அரிசியைத் தனிப்படை போலீசார் சனிக்கிழமையன்று அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுத புரம் பகுதியிலிருந்து ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப் படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட எஸ்பி-யின் உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனைப் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 25 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 1,250 கிலோ ரேசன் அரிசி கடத்திச் செல்லப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேலாயுதபுரம் 2-ஆவது தெருவைச் சேர்ந்த காமராஜ் (65) என்பவரைப் போலீசார் பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி வேன் ஆகியவற்றை போலீசார் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p><strong>முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு சார்ந்தோர் சான்று</strong> </p><p>திருநெல்வேலி, மே 10- முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு சார்ந்தோர் சான்று பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலு வலகத்தை அணுகலாம். இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2026 - 2027ஆம் கல்வியாண்டில் மேற்படிப்புகளுக்கு முன்னாள் படைவீரர்களின் சிறார் என்ற அடிப்படையில் இடஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேர முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு ஆண்டுதோறும் சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இச்சான்று பெறுவதற்கு முன்னாள் படைவீரர்களின் விபரத்தினை வேலிடேஷன் செய்திருக்க வேண்டும். மேலும் படை விலகல் சான்று, அடையாள அட்டை, மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை மற்றும் சாதிச் சான்று ஆகிய ஆவணங்களுடன் நெல்லை மாவட்டமுன்னாள் படைவீரர் நல அலுவல கத்தை அலுவலக வேலை நாட்களில் அணுகி பயன்பெற லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p><p><strong>இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி திருச்சிராப்பள்ளி</strong></p><p>, மே 10- திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி அன்பில் ஜங்கம்மராஜபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(64). இவர் அன்பில் அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, லால்குடி அட்சர மாவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாக னம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஆறுமுகம் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுதொடர்பாக, ஆறுமுகத்தின் மகள் மீனா கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை தனசேகர் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லைசென்ஸ் வாங்குவதற்கு முன்பாக சிறுவனை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக அவரது தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p><p><strong>சாத்தான்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை மே 29 விண்ணப்பிக்க கடைசி நாள்</strong></p><p>தூத்துக்குடி, மே 10- சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027- ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல் (Commerce), வணிக நிர்வாக வியல் (BBA), கணிதவியல், கணினி அறிவியல் ஆகிய இளநிலை (UG) பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங் களை www.tngasa.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வரும் மே 29-ஆம் தேதி கடைசி நாளாகும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிப் பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவி களுக்கு உதவ சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘மாணவர் சேர்க்கை உதவி மையம்’ (Admission Help Desk) செயல்பட்டு வருகிறது. மாணவிகள் இந்த மையத்தை நேரில் அணுகியும் கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலைக் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ.) ஜோசப் சுரேஷ் தெரிவித்துள்ளார்.</p><p><strong>கடையநல்லூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை</strong></p><p>கல்லூரி முதல்வர் தகவல் தென்காசி, மே 10- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் ஜெயா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிகாம், பிபிஏ, பிஎஸ்சி கணிதவியல், பிஎஸ்சி கணினி அறிவியல் இளநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வருகின்ற 29ஆம் தேதி வரை மாணவ, மாணவிகள் www. tngasa.in &lt;</p><p><br></p><p> &gt; என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய தள வசதியுடன் உதவி மையம் கல்லூரி வளா கத்தில் செயல்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவை சார்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.2, மற்றபிரிவை சேர்ந்த மாணவ ,மாணவி களுக்கு ரூ.50 ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்கள்: 12ஆம் வகுப்பு மாற்று சான்றிதழ், 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், மின்னஞ் சல் முகவரி, கைபேசி எண், இரண்டு பாஸ் போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பக் கட்டணம் கட்டுவதற்கு ஏடிஎம் கார்டு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p><p><strong>நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு</strong></p><p>திருநெல்வேலி, மே 10- நெல்லை ராணி அண்ணா கல்லூரி உட்பட அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக நேரடியாக விண்ணப்பிக்கலாம். மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் செயல்பட்டு வரும் மாணவர் சேர்க்கை மையங்களுக்கு சென்றும் விண் ணப்பிக்கலாம். நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 15 இளநிலை பாடப்பிரிவுகள் (தமிழ், ஆங்கிலம்,பொருளியல், வரலாறு, இதழியல் மற்றும் மக்கள்தொடர்பியல், மனிதவள மேம்பாடு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், வணிகவியல், சமூகவியல் மற்றும் புவியமைப்பியல் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் சேர்க்கை மையத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். நேரில் வரும் மாணவர்கள் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை நகல், வருமான சான்றிதழ் நகல் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட சாதி சான்றிதழ் நகல், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றி தழ்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண், பாஸ் போர்ட் அளவு புகைப்படம்-2 கொண்டு வர வேண்டும். ஓசி., பிசி., எம்.பி.சி., டி.என்.சி., ஆகி யோருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 48. பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணங்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங் மற்றும் யு.பி.ஐ., மூலம் செலுத்த இயலும். அரசு விதிகளுக்குட்பட்டு மாணவர் சேர்க்கை நடக்கும். மே 29 ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் (பொ) விக்டோரியா தங்கம் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.