தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்
17 Dec 2025, 4:11 pm
<p>தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் புதனன்று (டிச.17) ஓய்வூதியர் தினக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட துணைத் தலைவர் து.மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.வினாயகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆர்.ஜெயராமன் துவக்கவுரையாற்ற, பொருளாளர் கன்னியப்பன் கருத்துரை வழங்கினார். மாநில செயலாளர் ம.நாதன் சிறப்புரையாற்றினார். இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் எம்.சந்திரசேகர் நன்றி கூறினார்.</p>
