அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 10- ஈரான் மீது போர் தொடுத் துள்ள அமெரிக்கா - இஸ் ரேலை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார் பில் செவ்வாயன்று ஊத்துக் குளி தாலுகா குழு சார்பில் ஊத்துக்குளி ஆர்.எஸ். பகு தியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊத்துக்குளியில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா துணைத் தலை வர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கு.சரஸ்வதி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். லாபவெறி, எண்ணெய் வளக் கொள்ளை, டாலர் சந்தை ஆதிக்கத்திற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தி பல்லாயி ரக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஏகாதிபத்திய அமெரிக்கா - இஸ்ரேலை கண் டித்து முழக்கங்கள் எழுப்பினர். அதேபோல் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் குடிமங்கலம் ஒன்றியத்தில் இராமச் சந்திராபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.விஜயகுமார் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.கனகராஜ் கண்டன உரையாற்றினார். இதில் திரளா னோர் பங்கேற்றனர்.</p>
