தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அதிருப்தி -
1 Feb 2026, 3:51 pm
<p><strong>தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அதிருப்தி</strong></p>
<p>ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதி யாண்டுக்கான பட்ஜெட், தொழில் வணிகத் துறையினரின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றத் தவறிய ஒரு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது எனத் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்துச் சங்கத்தின் தலைவர் டாக்டர் என். ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழக்கமான அறிவிப்புகளே மிச்சம் நிதியமைச்சராகத் தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் அவர்களின் இன்றைய அறிவிப்புகள், தொழில் வணிகத் துறை சார்பாகப் பார்க்கும்போது ஒரு வழக்கமான அறிக்கையாகவே உள்ளது. மாவட்டந்தோறும் மகளிர் விடுதி,</p>
<p>ஆதிச்சநல்லூர் கலாச்சார மையம், புதிய நீர்வழிப் பாதைகள் மூலம் போக்குவரத்தை 12 சதவீதமாக உயர்த்துவது, வெளிநாட்டுச் சுற்றுலா பேக்கேஜ்களுக்கான TCS 2 சதவீதமாகக் குறைப்பு, சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சிக்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை எல்லாம் வழக்கமான அறிவிப்புகளாகவே உள்ளன. வரவேற்கத்தக்க சில அம்சங்கள் நாடு முழுவதும் புதிதாக 7 அதிவேக ரயில் தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; அதில் ஹைதராபாத் - சென்னை மற்றும் சென்னை - பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 6.5 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதும் வர வேற்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படு கிறது. தமிழகம் மற்றும் மதுரை புறக்கணிப்பு: பெருத்த ஏமாற்றம் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், மாநிலத்திற்கான எந்தவொரு சிறப்பு அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. குறிப்பாக மதுரை மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான:</p>
<p>• மதுரை மெட்ரோ ரயில் திட்டம் • பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் நைபர் (NIPER) கல்வி நிறுவனம் • மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்- போன்ற எந்தவொரு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. முக்கியத் துறைகளுக்கான குறைந்த நிதி ஒதுக்கீடு வேளாண் துறை (₹1,62,671 கோடி), கல்வி (₹1,39,289 கோடி), பொது சுகாதாரம் (₹1,04,599 கோடி) மற்றும் தொழில் வர்த்தகத் துறை (₹70,296 கோடி) ஆகிய முக்கியமான துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவாகும். இத்துறைகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு தற்போதைய ₹4 லட்சத்திலிருந்து கூடுதலாக உயர்த்தப்படாததும் ஏமாற்றமே. ஆக மொத்தத்தில், தொழில் வணிகத் துறை யின் வளர்ச்சிக்குத் தேவையான உத்வேகம் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது வருத்த மளிக்கிறது.</p>
