தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் இன்று முதல் சுய கணக்கெடுப்பு - உங்கள் விவரங்களை பதிவு செய்வது எப்படி?

yesterday
தமிழ்நாட்டில் இன்று முதல் சுய கணக்கெடுப்பு - உங்கள் விவரங்களை பதிவு செய்வது எப்படி?
<p>16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இன்று முதல் சுய கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.</p><p><strong>இதுகுறித்து கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு தெரிவித்ததாவது:</strong></p><p>பொதுமக்கள் se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து சுய கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். இதில் மொத்தம் 33 விவரங்களை பதிவிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், சுய கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கூடுதல் வசதி மட்டுமே. ஆகஸ்ட் 1 முதல் கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் போது, அவர்களிடம் தேவையான தகவல்களை வழங்கி பதிவு செய்து கொள்ளலாம்.</p><p>மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><strong>சுய கணக்கெடுப்பு செய்வது எப்படி?</strong></p><p>1. se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.</p><p>2. உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, OTP மூலம் உள்நுழையுங்கள்.</p><p>3. மாநிலம், மாவட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தொடர்பான விவரங்களைத் தேர்வு செய்யுங்கள்.</p><p>4. டிஜிட்டல் வரைபடத்தில் உங்கள் வீட்டின் இருப்பிடத்தைக் குறிக்கவும்.</p><p>5. வீடு மற்றும் குடும்பம் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.</p><p>6. அனைத்து தகவல்களையும் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு SE ID வழங்கப்படும்.</p><p>7. அந்த SE ID-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.</p><p>8. கணக்கெடுப்பாளர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, அந்த SE ID-ஐ வழங்குங்கள்.</p><p>9. அதன் பின்னர், கணக்கெடுப்பாளர் உங்கள் தகவல்களை உறுதிப்படுத்தி கணக்கெடுப்பு பணியை நிறைவு செய்வார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.