தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றத்தில் தாக்கல் ஆன தமிழக நிதிநிலை அறிக்கை: முக்கிய அறிவிப்புகள் என்ன?

yesterday
சட்டமன்றத்தில் தாக்கல் ஆன தமிழக நிதிநிலை அறிக்கை: முக்கிய அறிவிப்புகள் என்ன?
<p>தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதல் நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.</p><p>இந்த அறிக்கையில் பல்வேறு புதிய மற்றும் தொடர்ச்சியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><strong>முக்கிய அறிவிப்புகள்:</strong></p><p>* &#39;தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* 3,734 அரசுப் பள்ளிகளை ரூ.2,132 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் திட்டம்; இதில் இந்த ஆண்டிற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.</p><p>* பள்ளி பாடத்திட்ட மறுசீரமைப்பிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* 11ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கீடு.</p><p>* பொதுநூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை வடிவமைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.</p><p>* சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி மற்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* 12 லட்சம் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு லட்சம் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.</p><p>* பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு.</p><p>* மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1,485 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் &#39;வெற்றி 150’ திட்டம் அறிமுகம். 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.</p><p>* நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* மூத்த குடிமக்களுக்கான புனிதப் பயணத் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>இவை தவிர, பல்வேறு துறைகள் மற்றும் நலத்திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p>மேலும் பட்ஜெட் மீது ஆக. 7 முதல் விவாதம் தொடங்கும் எனவும் செப்டம்பர் 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.