தமிழ்நாட்டில் கலர் அப்பளங்களுக்கு தடை!
16 Jul 2026, 5:39 pm
<p>தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.</p><p>உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கலர் அப்பளம் தொடர்ந்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தரமான முறையில் உளுந்து மற்றும் அரிசி உள்ளிட்டவற்றில் தயாரிக்கப்படும் அப்பள வகைகளை வாங்கி சாப்பிடவும் குழந்தைகளுக்குக் கொடுக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>
