தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

22 Nov 2025, 4:09 pm
தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!
<p><strong>தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!</strong></p> <p>சென்னை, நவ.22- புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமா னார். அவருக்கு வயது 92. ஈரோடு மாவட்டம், சென்னிமலையை பூர்வீக மாகக் கொண்டவரான தமி ழன்பன், செ.இரா. நடராசன் - &nbsp;வள்ளியம்மாள் தம்பதியரின் ஒன்பது குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர். ந. ஜெகதீசன் என்ற இயற் &nbsp;பெயரைக் கொண்ட தமி ழன்பன், கவிதை, புதினம், நாடகம், பாடல்கள், திற னாய்வு மற்றும் வாழ்க்கை &nbsp;வரலாறு என ஏராளமான படைப்புகளை வழங்கிய வர். இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளிலும், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பன் &nbsp;னாட்டு மொழிகளிலும் பரந்து பட்ட வாசகர் தளத்தை பெற்ற னவாகும். &lsquo;வணக்கம் வள் ளுவ&rsquo; படைப்பு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற சிறப்புக்குரியது. தனது இரண்டு மகன் களில் ஒருவருக்கு பாப்லோ நெருடா, மற்றவருக்கு பாரதிதாசன் என்று பெயர் சூட்டினார்.</p> <p><strong>முற்போக்கு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!</strong></p> <p>கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: பாவேந்தர் பாரதிதாசன் கவிமரபைச் சேர்ந்த முற் போக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலியை தெரி வித்துக்கொள்கிறோம். மரபுக்கவிதை, ஹைக்கூ என கவிதையின் அனைத்து &nbsp;வடிவங்களிலும் மிளிர்ந்தவர். இவருடைய கவியரங்க கவிதைகளில் அர்த்தச் செறிவுடன் அனல் தெறிக்கும். பொதுவுடமைக் கருத்துக்களை தனது கவிதைகளில் பரப்பிய அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், சாதி, மத வெறி, மூடநம்பிக்கை சிந்தனைகளைச் சாடுபவராகவும் விளங்கினார். &lsquo;வணக்கம் வள்ளுவ&rsquo; கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சிலி நாட்டுப் புரட்சிக் &nbsp;கவிஞர் பாப்லோ நெருடா மீது பெரும்பற்று கொண்ட கவி ஞர் ஈரோடு தமிழன்பன், தனது கவிதைகளில் சமரசமற்ற ஏகாதிபத்திய உணர்வை வெளிப்படுத்தியவர். அவரு டைய மறைவு முற்போக்கு கலை, இலக்கிய உலகிற்கு பேரிழப்பு. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் &nbsp;வதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.