தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறைகள் மற்றும் இலவச நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

30 Jan 2026, 12:59 pm
பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறைகள் மற்றும் இலவச நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
<p>நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிவறைகள் மற்றும் நாப்கின்கள் இலவசமாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது<br /> ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி, ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.<br /> இந்த மனு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.<br /> இந்த விசாரணையில், நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். மாதவிடாய் சுகாதார உரிமை என்பது அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின்கீழ் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும்.&nbsp;<br /> அதுமட்டுமின்றி நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தனி கழிப்பறைகளை வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.<br /> மேலும் பெண்களுக்குக் கழிப்பறைகள் மற்றும் இலவச சுகாதார நாப்கின்களை வழங்கத் தவறினால், அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகள் வழங்கத் தவறும்பட்சத்தில், அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.