உச்சநீதிமன்ற கிளையை தென்னிந்தியாவில் அமைக்க வேண்டும்.
16 Jul 2026, 9:59 pm
<p>உச்சநீதிமன்ற கிளையை தென்னிந்தியாவில் அமைக்க வேண்டும்.சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வக்கீல் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கெவின், கவுரவ தலைவர் ராமசந்திரன் ஆகியோர் பேசினர். இதில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
