50 ஆண்டுகளுக்குப் பிறகு மிரட்டும் ‘சூப்பர் எல்-நினோ’ வழிகாட்டு நெறிமுறை வெளியிடாமல் அலட்சியமாக இருக்கும் மோடி அரசு
5 Jun 2026, 12:51 am
<p><strong>50 ஆண்டுகளுக்குப் பிறகு மிரட்டும் ‘சூப்பர் எல்-நினோ’ வழிகாட்டு நெறிமுறை வெளியிடாமல் அலட்சியமாக இருக்கும் மோடி அரசு</strong></p><p>புதுதில்லி 50 ஆண்டுகளுக்குப் பிறகு பசிபிக் பெருங்கடலில் ‘சூப்பர் எல்-நினோ’ உருவாக உள்ளது. இது ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பசிபிக் பெருங்கடலில் நீடிக்கும்.</p><p> இந்த ‘சூப்பர் எல்-நினோ’ தொடர்பாக ஐக்கிய நாடு கள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பசிபிக் பெருங்கடலின் மத்திய, கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதி கமாக சுமார் 2.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்வதையே ‘சூப்பர் எல்-நினோ’ நிகழ்வு ஆகும். </p><p>இது உலகளாவிய வானி லையை தலைகீழாக மாற்றி, சில இடங்களில் கடும் வறட்சியையும், சில இடங்களில் பெருவெள்ளத் தையும் ஏற்படுத்தும் இயற்கை நிகழ்வாகும். </p><p>குறிப் பாக, இந்தியாவின் முக்கிய பருவமழையான தென்மேற்கு பருவமழை பெருமளவில் குறைவ தால் இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்காவின் பல பகுதி களில் கடுமையான வறட்சி நிலவும். </p><p>இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. கொடிய எல்-நினோ ‘சூப்பர் எல்-நினோ’ 1972-73, 1997-98 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது</p><p>. ஆனால் இந்த ஆண்டு உருவாக இருக்கும் சூப்பர் எல்-நினோவை 1877– 1878 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கொடிய எல்-நினோவுடன் விஞ்ஞானிகள் ஒப்பிடுகின்றனர். </p><p>அன்றைய காலகட்டத்தில் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் பஞ்சம் ஏற்பட்டு லட்சக்கணக் கான மக்கள் உயிரிழந்தனர்.</p><p> இதே பாதிப்பு இந்த ஆண்டு ஏற்படலாம் என காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். </p><p>குறிப்பாக, இந்தியாவின் வடமேற்கு சமவெளி, தாய்லாந்தின் நெல் வயல் கள், ஆஸ்திரேலியாவின் கோதுமை மண்டலம், இந் தோனேசியாவின் பனை எண்ணெய் தோட்டங்கள் ஆகியவை வறட்சியால் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கைகள் அடுத்தடுத்து வந்துள்ளன.</p><p>அதே சமயம் குடிநீர் பஞ்சம் மிக மோசமான அளவில் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் ‘சூப்பர் எல்-நினோ’ தொடர்பாக விவாதங்கள், அவசர ஆலோ சனைகள் நடைபெற்று வருகின்றன. </p><p>ஆனால் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆட்சி செய்யும் ஒன்றிய மோடி அரசோ, ‘சூப்பர் எல்- நினோ’ தொடர்பாக இன்னும் வழிகாட்டு நெறி முறையோ அல்லது ஆலோசனைக் கூட்டமோ நடத்த வில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>
