கோடைக்கால சிறப்புத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்!
19 Feb 2026, 3:09 pm
<p><strong>கோடைக்கால சிறப்புத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்!</strong></p>
<p>சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு சென்னை, பிப். 19 - இடைக்கால நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, ”தேர்தல் வரவிருப்பதாலேயே, கோடைக்கால சிறப்புத்தொகை உடன் சேர்த்து ரூ. 5000 இரவோடு இரவாக வரவு வைக்கப்பட்டுள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்துப் பேசிய சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், ”கோடைக்காலத்தில் மக்களுக்கு மருத்துவச் செலவு வரலாம் என்பதால் ரூ. 2,000 கொடுக்கப்பட்டது, மகளிர் உரிமைத் தொகைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்தச் சூழ்ச்சியை திமுக அரசு முறியடித்துள்ளது” என்றார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உடன், இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.</p>
