கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க வழிகாட்டுதல்கள்!
28 May 2026, 9:45 pm
<p><strong>கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க வழிகாட்டுதல்கள்! </strong></p><p>சென்னை, மே 28 - தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கும்படி சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. </p><p> இதுதொடர்பாக, மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p> வெயிலினால் உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைந்து தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படலாம் என மாநகராட்சி எச்சரிக்கிறது.</p><p> குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர் அதிகம் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அறிவுறுத்தல் வெளியே செல்லும்போது தலையில் துண்டு அல்லது தொப்பி அணிந்து குடை பயன்படுத்த வேண்டும்.</p><p> அடிக்கடி தண்ணீர், மோர், இளநீர், ஓ.ஆர்.எஸ். கரைசல் பருக வேண்டும். </p><p>தளர்ந்த பருத்தி ஆடைகள் அணிவது நல்லது. பகலில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். </p><p>சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல்களை திரைச்சீலைகளால் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>தவிர்க்க வேண்டியவை யாரேனும் மயக்கமடைந்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்க வேண்டும். </p><p>பாதிக்கப்பட்டவரை ஒரு பக்கமாக படுக்க வைத்து உடைகளை தளர்த்தி குளிர்ந்த நீர் தெளிக்க வேண்டும்.</p><p> வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கக்கூடாது என்று மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. </p><p>சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பிற மருத்துவமனைகளில் 1.34 லட்சம் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.</p><p> வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் 57 வீடற்றோர் காப்பகங்களில் தங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
