தாய்க்கு தெரியாமல் சிறுமியின் உடல் எரியூட்டல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்
25 May 2026, 9:32 pm
<p><strong>தாய்க்கு தெரியாமல் சிறுமியின் உடல் எரியூட்டல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்</strong></p><p>சென்னை, மே 25 - சூலூரில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை, அவரது தாயாருக்கு தெரிவிக்காமல் எரியூட்டிய சம்பவத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டுமென அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.</p><p> இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிர மிளா, மாநில பொதுச் செய லாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், அவரது தாயாருக்குத் தெரியாமல் அவசரமாக எரியூட்டப்பட்டதாக சிறுமி யின் தாயார் அளித்துள்ள பேட்டி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குழந்தையை இழந்த தாய்க்கு, தனது குழந்தை யின் உடலை இறுதியாகக் கூட பார்க்க முடியாத நிலை உருவாக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயல். </p><p>சட்ட நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ பரிசோ தனைகள் முடிந்த பின்னரும், தாயின் ஒப்புதல் மற்றும் தக வல் இல்லாமல் உடலை எரி யூட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் கவ லைக்குரியது. </p><p>இது காவல்துறையின் கடுமையான அலட்சியமும் அதிகார துஷ்பிரயோகமும் ஆகும். </p><p>பாதிக்கப்பட்ட தாயின் உணர்வுகளையும் உரிமை களையும் மதிக்காமல் நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது.</p><p> இச்சம் பவம் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.</p><p> எனவே சிறுமி யின் உடல் எரியூட்டப்பட்ட சூழ்நிலை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண் டும். </p><p>குடும்பத்தினரின் அனு மதி பெறப்பட்டதா, சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும். </p><p>இந்த விவகாரத்தில் அலட்சியம் அல்லது விதி முறை மீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். </p><p>பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களில் காவல்துறை மனிதாபிமானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் வகையில் தெளிவான நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண் டும். </p><p>பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண் டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.</p><p> இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
