தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரு நூற்றாண்டு காலப் புரட்சிகர வரலாறு : ஓர் உணர்ச்சிமிகு காவியம் - ச.வீரமணி

17 May 2026, 8:45 pm
ஒரு நூற்றாண்டு காலப் புரட்சிகர வரலாறு : ஓர் உணர்ச்சிமிகு காவியம் -  ச.வீரமணி
<p><strong>ஒரு நூற்றாண்டு காலப் புரட்சிகர வரலாறு : ஓர் உணர்ச்சிமிகு காவியம் - ச.வீரமணி</strong></p><p>அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தைக் கட்டியெழுப்பிய மாபெரும் தலைவரும், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினருமான தோழர் சுகுமால் சென் அவர்களின் அரிய வரலாற்றுப் பங்களிப்பே தில்லியின் ஆகார் புக்ஸ் (Aakar Books) நிறுவனம் வெளியிட்டுள்ள 1917இல் ருஷ்யாவில் ஏற்பட்ட சோசலிஸ்ட் புரட்சியிலிருந்து 1991இல் ஏற்பட்ட முதலாளித்துவ எதிர்ப்புரட்சி வரை: ஒரு நூற்றாண்டு காலப் புரட்சிகர வரலாறு எனும் பிரம்மாண்டமான ஆய்வு நூல். </p><p><strong>வர்க்கப் போராட்டத்தின் வழிகாட்டி</strong> </p><p> மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் தோழர் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி அரசால் மீண்டும் பணியமர்த்தப்பட்ட சுகுமால் சென், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளெல்லாம் களம் கண்டவர். இந்தியாவின் மாநில அரசு ஊழியர்கள் இன்று ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் பெறுகிறார்கள் என்றால், அதற்குத் தோழர் சுகுமால் சென் முன்னெடுத்த போராட்டங்களே அடித்தளம்.<strong> </strong></p><p><strong>புரட்சியின் நூறாண்டு கால ஆவணம்</strong> </p><p> ரஷ்ய - நவம்பர் புரட்சியின் நூறாண்டு கால வரலாற்றைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்கு, சுமார் 1055 பக்கங்களைக் கொண்ட (இரண்டு பாகங்கள்) இந்த நூல் ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் பெட்டகமாகும். 1917-இல் லெனின் தலைமையில் மலர்ந்த சோசலிசப் புரட்சி, உலகிற்கு வழங்கிய மாற்றுப் பொருளாதார-சமூகப் பாதையையும், 1991-இல் சோவியத் யூனியன் வீழ்ந்ததன் பின்னணியில் இருந்த முதலாளித்துவ எதிர்ப்புரட்சியின் தந்திரங்களையும் இந்நூல் ஆழமாக விவாதிக்கிறது. </p><p><strong>வழிகாட்டும் புரட்சிகர சித்தாந்தம்</strong> </p><p>சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, மூலதனத்தின் காட்டுமிராண்டித்தனமான ஆதிக்கத்தை உலகம் எதிர்கொண்டு வரும் இக்காலகட்டத்திலும், மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகள் காலாவதியாகிவிடவில்லை என்பதை இந்நூல் அழுத்தமாக நிறுவுகிறது. “லெனின் மற்றும் ஸ்டாலின் பின்பற்றிய புரட்சிகர சித்தாந்தம் நமக்கு என்றென்றும் வழிகாட்டும் நட்சத்திரமாக இருந்திடும். இன்றோ அல்லது நாளையோ புரட்சியாளர்கள் மூலதனத்தின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியினைத் தூக்கி எறிவதில் வெற்றி பெறுவார்கள். சோசலிச சமூக அமைப்பைக் கட்டி எழுப்புவார்கள்” என்ற தோழர் சுகுமால் சென்னின் தீர்க்கமான முன்னுரை வரிகள், உலகெங்கும் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்குப் பேரெழுச்சியையும் வர்க்க உணர்வையும் ஊட்டவல்லவை.</p><p>சோசலிசத்தின் வரலாற்றையும் அதன் மீதான உலகளாவிய சதிகளையும் சித்தாந்தப் பின்னணியுடன் கற்க விரும்பும் அரசியல் பயிலுநர்கள் மற்றும் தொழிற்சங்க ஊழியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய மாபெரும் வரலாற்று ஆவணம் இது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.