2026-27 பருவ கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.95 மட்டுமே உயர்வு! தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டனம்
9 May 2026, 9:52 pm
<p><strong>2026-27 பருவ கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.95 மட்டுமே உயர்வு! தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டனம்</strong></p><p>சென்னை, மே 9 - 2026-27 ஆம் ஆண்டு பருவ கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 95 ரூபாய் மட்டுமே உயர்த்தி, ஐந்து கோடி கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது</p><p> இது தொடர்பாக சங்கத்தின் மாநில பொ துச் செயலாளர் டி.ரவீந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு 2026-27 ஆம் பருவத்திற்கு 10.25 சதவீதம் பிழிதிறன் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,650 விலையாக அறிவித்துள்ளது. 9.5 பிழிதிறன் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,383 குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. </p><p>2025-26 நடப்பு கரும்பு பருவத்திற்கு 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,550, 9.5 சதவீதம் பிழிதிற னுக்கு ரூ.3,290 விலையை ஒன்றிய அரசு அறி வித்தது. </p><p>கடந்த ஆண்டை விட ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய பாஜக அரசு வெறும் 95 ரூபாய் மட்டுமே விலையை உயர்த்தி யுள்ளது. </p><p>உரம், டீசல் விலைகள் உயர்ந்து கரும்பு உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில் ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.5,500 வழங்க வேண்டும். ஆனால் நாடு முழுவதும் உள்ள 5 கோடி கரும்பு விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பற்றி கவலைப்படாமல் அடுத்த ஆண்டு கரும்புக்கு ஒன்றிய பாஜக அரசு ஒரு டன்னுக்கு வெறும் ரூ.95 மட்டுமே விலையை உயர்த்தியுள்ளதை தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக் கிறது. </p><p>சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, உற்பத்தி செலவை கணக்கிட்டு அதோடு 50 சதவீதம் சேர்த்து சி2+50 விலை வழங்ப் படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறி வித்தது. </p><p>கடந்த 10 ஆண்டு காலமாக சாமிநா தன் குழு பரிந்துரையை அமல்படுத்த வில்லை. </p><p>விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று சொன்னார் கள்; கடனை தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள்; ஆனால் எதையும் அமல் படுத்தவில்லை. </p><p>மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கைகளால், வேளாண் நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. </p><p>இந்நிலையில் கரும்பு ஓர் ஆண்டு பயிர் என்பதை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ.5,500 விலை அறிவித்து வழங்க வேண்டும். </p><p>தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள மாநில அரசு கரும்பு க்கு பரிந்துரை விலையை அறிவித்து, கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
