திருப்பூர் சாய ஆலைகளில் திடீர் கட்டண உயர்வு
10 Mar 2026, 3:51 pm
<p><strong>திருப்பூர் சாய ஆலைகளில் திடீர் கட்டண உயர்வு</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 10- அமெரிக்கா ஈரான் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், சாய ஆலை உரிமை யாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத் தில் நிறங்கள் அடிப்படையில் கட்டண உயர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள் ளது. திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள சாய ஆலை உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலை வர் காந்திராஜன் தலைமை வகித்தார். இதில், அமெரிக்கா ஈரான் போர் காரண மாக மூலப்பொருட்கள் விலை அபரிமித மாக உயர்ந்துள்ளதால் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ரூ.10, ரூ.15, ரூ.20 என நிறங்கள் அடிப்படையில் கட்டண உயர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்ன லாடை நிறுவனங்கள் இதற்கு உதவி செய்ய வேண்டும். இல்லை எனில் சாய ஆலை நிறுவனங்கள் மூடப்பட வேண் டிய நிலைக்கு தள்ளப்படும். சிலிண்டர் கிலோ ரூ.60 இல் இருந்து ரூ.104 ரூபா யாக உயர்ந்துள்ளது. பெராக்சைடு ரூ.26 ல் இருந்து ரூ.65 ரூபாயாக உயர்ந் துள்ளது. அசிட்டிக் ஆசிட் ரூ.46 ரூபாயில் இருந்து ரூ.100 ரூபாய் என மூலப்பொ ருட்கள் அனைத்தும் 20 சதவீதம் முதல் 2 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளது. எனவே சாயமிட கிலோவுக்கு ரூ.60க்கு பெறப்பட்ட லேசான நிற வகைக்கு ரூ.70 க்கும், ரூ.80க்கு பெறப்பட்ட இடை நிறத் திற்கு ரூ.95க்கும், 100 ரூபாய் பெறப்பட்ட அடர் நிறங்களுக்கு ரூ.120 என கட்டணம் உயர்த்தி நிர்ணயம் செய்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கூட்டத்தில் செயலாளர் பொன் னுசாமி, பொருளாளர் மாதேஸ்வரன், துணைத்தலைவர்கள் பக்தவச்சலம், ஈஸ்வரன், இணைச்செயலாளர் செந் தில்குமார் உள்பட பலர் கலந்து கொண் டனர்.</p>
