தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை அஞ்சலகங்கள் மூடல் முயற்சி - சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

30 May 2026, 1:20 pm
மதுரை அஞ்சலகங்கள் மூடல் முயற்சி - சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு!
<p>மதுரையில் அஞ்சலகங்கள் மூடல் முயற்சிக்குச் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தமிழ்நாடு CPMG மற்றும் ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சருக்குக் சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,</p><p>“மதுரையில் மிகச் சிறப்பாகவும், இலாபகரமாகவும் செயல்பட்டு வரும் ரயில்வே DRM அலுவலகம் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் அஞ்சலகங்களை மூடும் முயற்சியை அஞ்சல் துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>மதுரையின் மக்கள்தொகை 22 லட்சத்தைக் கடந்தும், 20 ஆண்டுகளாகப் புதிய அஞ்சலகங்கள் திறக்கப்படவில்லை; மாறாக இருக்கும் அஞ்சலகங்களை மூடுவது அநீதி!</p><p>மிகக் குறைந்த 2 ஊழியர்களுடன் இயங்கும் DRM அலுவலக அஞ்சலகம், 3 மாதங்களில் 5,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் ரூ.2 கோடிக்கும் மேல் வைப்புத் தொகை திரட்டியுள்ளது. ஜெய்ஹிந்த்புரம் அஞ்சலகம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொண்டு ரூ.1.5 கோடி வர்த்தகம் செய்துள்ளது. இத்தகைய அலுவலகங்களை மூடுவதற்கான நடவடிக்கை பொருத்தமான நடவடிக்கையாக இல்லை.</p><p>&quot;தற்காலிக இணைப்பு&quot; என்ற சாக்குப்போக்கில் அஞ்சலகங்களை மூடி, எளிய மக்களின் &#39;நிதிச் சேர்க்கை&#39; (Financial Inclusion) உரிமையைப் பறிக்கக் கூடாது. பொதுமக்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த அஞ்சலகங்கள் தொடர்ந்து அங்கேயே செயல்படுவதற்கான பொருத்தமான அறிவுறுத்தல்களை அலுவலர்களுக்கு வழங்கிடுமாறு ஒன்றிய அமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.