தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு; தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்கும் ஒன்றிய அரசு - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!

15 May 2026, 1:52 pm
பெட்ரோல் டீசல் விலை உயர்வு; தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்கும் ஒன்றிய அரசு - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
<p>பெட்ரோல், டீசல் விலையுயர்வை திரும்பப் பெற வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,</p><p>“பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு வன்மையான கண்டனம்.</p><p>ஆட்டோ, கால்டாக்சி, டெலிவரி ஊழியர்கள் இந்த விலையுயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.</p><p>ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதுபெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் லாபம் பார்த்த ஒன்றிய அரசு இப்போது விலையுயர்ந்தபோது அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்தியுள்ளது.</p><p>இதன் தாக்கம் தொடர்வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது.</p><p>தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்கும் ஒன்றிய அரசு.</p><p>உடனடியாக இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் எனக் கோருகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.