தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் மறுதேர்விலும் தொடரும் என்டிஏ-வின் குளறுபடிகள்!

15 Jun 2026, 9:00 pm
நீட் மறுதேர்விலும் தொடரும்  என்டிஏ-வின் குளறுபடிகள்!
<p><strong>நீட் மறுதேர்விலும் தொடரும் என்டிஏ-வின் குளறுபடிகள்!</strong></p><p><strong>சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!</strong></p><p>மதுரை, ஜூன் 15 - நீட் மறுதேர்வு நடைமுறைகளிலும், தேசிய தேர்வு முகமை (NTA) குளறுபடிகளை அரங்கேற்றியிருப்ப தற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:</p><p><strong>நுழைவுச் சீட்டு தரவிறக்கம்</strong></p><p>மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால், ஜூன் 21 அன்று நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு (Admit Card) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்டது.</p><p>அதனைப் பதிவிறக்கம் செய்ய முயலும் மாணவர்களிடம், வங்கிக் கணக்கு விவரங்களை மீண்டும் உறுதி செய்யுமாறு என்.டி.ஏ (NTA) இணையதளம் கட்டாயப்படுத்துகிறது.</p><p><strong>முடங்கி விடும் இணையதளம்</strong></p><p>ஆனால், அந்த இணைப்பைக் கிளிக் செய்தால், ஏற்கெனவே பதிவு செய்த வங்கி விவரங்கள் காட்டப்படுகின்றன. அதனுடன் இருக்கும் ‘Edit &amp; Proceed’ பொத்தானைக் கிளிக் செய்தால், இணையதளம் முடங்கி விடுகிறது.</p><p>பிறகு மீண்டும் உள்நுழையும்போது, “நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தர விரும்பவில்லை” (You have agreed not to provide bank details) என்று தவறாகக் காட்டி, நுழைவுச்சீட்டை மட்டும் பதிவிறக்கம் செய்யும் நிலையை என்.டி.ஏ. உருவாக்கியுள்ளது.</p><p><strong>வங்கிக் கணக்கு விவரங்கள் எங்கே?</strong></p><p>ஞாயிற்றுக்கிழமை 7 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை 4 லட்சம் பேர் நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்ததாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோரின் வங்கி விவரங்கள் மாயமாகியுள்ளன. </p><p>இதனால், தேர்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள் ளது. கட்டணத்தைத் திருப்பித் தருவோம் என உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்த என்.டி.ஏ. அதைத் தராமல் இருக்கவே இந்தத் திட்டமிட்ட மோசடியைச் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.</p><p><strong>குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும்</strong></p><p>எனவே, தேசிய தேர்வு முகமையானது, ‘1. நுழைவுச்சீட்டுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு சரிபார்ப்பு நடைமுறையை உடனடியாக நீக்க வேண்டும்; 2. அனைத்து மாணவர்களும் கட்டணத்தைத் திரும்பப் பெற ஏதுவாக, வங்கி விவரங்களைப் பதிவேற்றும் வசதி யைத் தனியாக வழங்க வேண்டும்; 3. இந்த வசதியை மறுதேர்வு முடிந்த பிறகு இரண்டு வாரங்கள் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்; 4. இது குறித்து முறையான, வெளிப்படையான அறிவிப்பை என்.டி.ஏ வெளியிட வேண்டும்’ என கோரிக்கை விடுக்கிறேன்.</p><p>ஏற்கெனவே தேர்வு ரத்தானதால் மன உளைச்சலிலும், அச்சத்திலும் இருக்கும் மாணவர்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள். இவ்விவகாரத்தில் உரிய தீர்வுகளை விரைந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.