கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆதரவாக நெல்லையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
30 Jan 2026, 5:56 pm
<p><strong>கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆதரவாக நெல்லையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருநெல்வேலி,ஜன.30- தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகை களை உடனடியாக வழங்கவும், காலிப்பணி யிடங்களை நிரப்பவும் கோரி தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆசிரி யர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க செயலாளர் சைலஸ் அருள்ராஜ்,மூட்டா சங்க நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.</p>
