தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

6 பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றக் கோரிக்கை மாணவர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

19 Feb 2026, 3:09 pm
6 பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றக் கோரிக்கை  மாணவர்கள் பெருந்திரள்  முறையீடு போராட்டம்
<p><strong>6 பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றக் கோரிக்கை &nbsp;மாணவர்கள் பெருந்திரள் &nbsp;முறையீடு போராட்டம்</strong></p> <p>திருநெல்வேலி, பிப் .19- நெல்லை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கும் 6 பல் கலைக்கழக கல்லூரிகளை உடனடியாக அரசு கல்லூரி களாக அறிவிக்கக் கோரி, பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு எஸ்.எப்.ஐ (SFI) சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடை பெற்றது. &nbsp;25 ஆண்டுகளாகியும் இக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படாத தால் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இழுபறியில் சிக்கி யுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். &nbsp;தமிழகத்தின் பிற பகுதி களில் 35 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட நிலையில், தங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படு வதாக அவர்கள் முழக்கமிட்ட னர். &nbsp;சட்டமன்ற கூட்டத்தொடரி லேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராவிடில் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக மாணவர்கள் எச்சரித்தனர். &nbsp;இந்த பெருந்திரள் முறை யீட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி, தென்காசி மாவட்டச் செயலா ளர்கள் சைலஸ் ராம்குமார் மதன், மாவட்டத் தலைவர்கள் சுரேஷ் மாடசாமி மற்றும் 500க்கும் அதிகமான மாண வர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.