தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மடிக்கணினி கோரி மாணவர்கள் தர்ணா
20 Feb 2026, 2:39 pm
<p><strong>தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மடிக்கணினி கோரி மாணவர்கள் தர்ணா</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.20- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழக அரசின் மடிக்கணினி வழங்கக் கோரி ஒருங்கிணைந்த மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் வியாழக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் தெரிக்கையில், “அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு, அண்மையில் விலையில்லா மடிக்கணினி வழங்கியது. இத்திட்டம் தொழில் சார்ந்த ஆய்வு பணியில் ஈடுபடும் மாணவர்களின் வளர்ச்சிக்கு பயன்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் ஒரு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், இத்திட்டத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் நான்காமாண்டு மாணவர்களுக்கும், முதுகலை முதலாமாண்டு, இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை. அடுத்து முனைவர் பட்டம் படிப்பதற்கும், போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கும் எங்களுக்கு மடிக்கணினியின் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே, எங்களுக்கும் மடிக்கணினி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர். மாணவர்களிடம் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், மடிக்கணினி வழங்குமாறு அரசுக்கு கருத்துரு அனுப்புவதாக பதிவாளர் (பொ) உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை மாணவர்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.</p>
<p> </p>
