முந்தய பக்கம்

கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர் சங்கம் போராட்டம்

25 Feb 2026, 3:22 pm
கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு  ஆதரவாக மாணவர் சங்கம் போராட்டம்
<p><strong>கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு &nbsp;ஆதரவாக மாணவர் சங்கம் போராட்டம்</strong></p> <p>சேலம், பிப். 25- கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு ஆதர வாக, &nbsp;சேலத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளை &nbsp;புறக்கணித்து புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் அனைவ ருக்கும் யுஜிசி விதிகளின்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட &nbsp;வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கௌரவ &nbsp;விரிவுரையாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து &nbsp;வருகின்றனர். விரிவுரையாளர்களின் இந்தப் போராட்டத்தினால் கல் லூரிகளில் வகுப்புகள் நடைபெறாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், விரி வுரையாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு &nbsp;உடனே ஏற்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் &nbsp;ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அரசு கலைக் கல்லூரி யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க &nbsp;மாவட்டத் தலைவர் கே. டார்வின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். பவித்ரன், துணை நிர்வாகிகள் கோகுல்ராஜ், நவீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாண வர்கள் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram