மின்கம்பி உரசி தீ விபத்து: வைக்கோல் லாரி எரிந்து நாசம்
3 Sept 2026, 1:12 am
<p><strong>மின்கம்பி உரசி தீ விபத்து: வைக்கோல் லாரி எரிந்து நாசம்</strong></p><p>ராணிப்பேட்டை, செப். 2-ஆற்காடு அருகே லாடாவரம் கிராமத்தில் பில்லேரியைச் சேர்ந்த ராஜா என்பவரது நிலத்திலிருந்து 150 வைக்கோல் கட்டுகளை ஏற்றிச்சென்ற ஈச்சர் லாரியில், உயர் மின்னழுத்த மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டது.இவ்விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்கள் காய மின்றித் தப்பிய நிலையில், லாரி யும் 150 வைக்கோல் கட்டுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. ஆற்காடு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த</p><p>நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>
