முந்தய பக்கம்

பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு

9 Apr 2026, 5:30 am
பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு
<p><strong>பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு</strong></p><p>மும்பை: போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் காலை முதலே உயர்வுடன் காணப்பட்டு முடிவடைந்தன.</p><p>மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2,983 புள்ளிகள், அதாவது கிட்டத்தட்ட 4% உயர்ந்து, 77,599.66 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 குறியீடு 920 புள்ளிகள் அதிகரித்து 24,012.95 புள்ளிகளை எட்டியது. இந்த முன்னேற்றத்தால் முதலீட்டாளர்கள் ரூ.15 லட்சம் கோடியை அள்ளினர்.</p><p>ஆனால் தங்கம் விலை மட்டும் தாறுமாறாக உயர்ந்தன. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து, ரூ.1,13,600க்கு விற்பனையாகியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram