முந்தய பக்கம்

வந்தவாசியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

10 Apr 2026, 5:30 am
வந்தவாசியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
<p><strong>வந்தவாசியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்</strong></p><p>திருவண்ணாமலை, ஏப். 9- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். அம்பேத்குமார், இன்று வந்தவாசி நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>வந்தவாசி நகரம், ஆரணி சாலை, காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவருக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>இந்தப் பிரச்சாரத்தின் போது பேசிய அம்பேத்குமார், &quot;வந்தவாசி மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்&quot; என உறுதி அளித்தார். தொகுதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மையமாக வைத்து இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram