தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுங்காங்கடையில் அறிவியல் பிரச்சாரம் உபகுழு மாநில மாநாடு

16 Jan 2026, 3:00 pm
சுங்காங்கடையில் அறிவியல் பிரச்சாரம் உபகுழு மாநில மாநாடு
<p><strong>சுங்காங்கடையில் அறிவியல் பிரச்சாரம் உபகுழு மாநில மாநாடு</strong></p> <p>நாகர்கோவில், ஜன.16- கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கடை யில் உள்ள &nbsp;அறிவியல் இயக்க மாவட்ட அலு வலக வளாகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் பிரச்சார உபகுழு மாநில மாநாடு இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக &nbsp;நடைபெற்றது. தொடக்க விழா மற்றும் பாராட்டு விழா நிகழ்வில் &nbsp;பிறீதி மற்றும் குழுவினரின் அறிவியல் &nbsp;பாடல் பாட &nbsp;நிகழ்வு தொடங்கியது. மாவட்ட இணைச் செயலாளர் சுசீலா மறைந்த ஆளுமை களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெனித் வரவேற் றார். மாவட்டத் தலைவர் பேரா. நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் &nbsp;சிவஸ்ரீ ரமேஷ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திப் பேசினார். மாநாட்டைத் துவக்கி வைத்து மாவட்ட &nbsp;வனத்துறை அலுவலர் &nbsp;டாக்டர் அன்பு, கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் &nbsp;அமைப்பின் மேனாள் மாநிலத் தலைவர் &nbsp;ரமேஷ், அகில &nbsp;இந்திய மக்கள் &nbsp;அறிவியல் இயக்க &nbsp;செயற்குழு &nbsp;உறுப்பினர் பேரா.மோகனா, ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி செல்வம், மாநில துணைத் &nbsp;தலைவர் சசிகுமார் , மேனாள் பொதுச்செய லாளர்கள் &nbsp;தாமஸ் பிராங்கோ, &nbsp;அமலராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயற்குழு உறுபினர் ஜினோபாய், பொதுகுழு உறுப்பினர் ஜாண்சிலி &nbsp;பாய், மலர் அமைப்பின் கவுரவத் தலைவர் செலி ன்மேரி, &nbsp;ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் &nbsp;ஹிரோஷிமா - நாகசாகி தினப் &nbsp;போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநிலச் செயலாளர் &nbsp;ஜினிதா தலைமையிலும், துளிர் திறனறிதல் தேர்வில் சாதனை படைத்த வர்களுக்கு மாவட்ட துணைத் தலைவர் விஜய லெட்சுமி மாவட்டபொருளாளர் செல்லத்தங்கம் &nbsp;ஆகியோர் தலைமையிலும் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட் டிற்கு அறிவியல் பிரச்சார இணை ஒருங்கி ணைப்பாளர் டாக்டர் சேதுராமன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் &nbsp;சசிகுமார் செயல்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார். &lsquo;யூத் பார் சயின்ஸ்&rsquo; குழுவுக்கான அறிக்கையை &nbsp;அதன் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தாக்கல் செய்தார். துளிர் இல்ல அறிக்கையை, ஒருங்கிணைப்பாளர் ஜினிதா சமர்ப்பித்தார். இந்த மாநாட்டில் &lsquo;சயின்ஸ் ஜங்ஷன்&rsquo; நிகழ்வு &nbsp;மற்றும் எதிர்கால அறிவியல் பிரச்சாரத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலச் செயலாளர்கள் தியாகராஜன், பால கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இறுதியாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் &nbsp;மாநிலப் பொதுச்செயலாளர் முகம்மது பாதுஷா &nbsp;நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் டோமினிக் ராஜ் &nbsp;நன்றி கூறினார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திர ளான அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.