உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை
25 Nov 2025, 3:29 pm
<p><strong>உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை</strong></p>
<p>கோவை, நவ.25- அன்னூரில் சாலை விபத் தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட தால் அரசு மரியாதையுடன் தக னம் செய்யப்பட்டது. கோவை, அன்னூர் அருகே குப்பனூர் ஒட்டக மண்டலம் கிரா மத்தை சேர்ந்தவர் நடராஜ் மகன் சதீஷ் (எ) சண்முகம் (40), அரசு ஒப்பந்த தாரர். கடந்த 22 ஆம் தேதியன்று பசூர் மொண் டிபாளையம் சாலையில் இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் சென்ற தனியார் பள்ளி பேருந்து திடீரென பிரேக் போட்டதால் இவர் பேருந்தின் பின்பக்கம் மோதி படுகாயம் அடைந்தார். இதையடுத்து இவரை ஆம்பு லன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாயன்று சிகிச்சை பல னின்றி சதீஷ் (எ) சண்முகம் மூளைச்சாவு அடைந்தார். இதைதொடர்ந்து இவரது உடல் உறுப்புகளை குடும் பத்தினர் தானம் செய்தனர். உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அன்னூர் வட்டாட்சியர் யமுனா, வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார், காவல் உதவி ஆய்வாளர் அப்துல் முத்தாலிப் மற்றும் போலீசார் சார்பில் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது.</p>
