புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள் கம்யூனிஸ்டுகள், விசிக கட்சிகளின் தோழமை உணர்வுக்கு நன்றி! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
9 May 2026, 10:37 pm
<p><strong>புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள் கம்யூனிஸ்டுகள், விசிக கட்சிகளின் தோழமை உணர்வுக்கு நன்றி! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை</strong></p><p>சென்னை, மே 9- கொள்கை அடிப்படையில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலேயே தொடர்வோம் என்று அறிவித்துள்ள இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் தோழமை உணர் வுக்கு நன்றி என் றும், தமிழகத்தில் அமையவுள்ள புதிய அரசுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி யுள்ளார். </p><p>திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை மு.க. ஸ்டாலின் எழுதியுள்ளார். </p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சியாக இருப்போம் என்றேன்! என் உயிரோடு கலந்திருக்கும் தலை வர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு களுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்க ளுக்கும் என் அன்பு வணக்கம். </p><p>தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். </p><p>எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. </p><p>ஆட்சி அமைக்கும் அள வுக்குப் பெரும்பான்மை இடங்களை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக் குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற் றுள்ளோம். </p><p>நான் ஏற்கெனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவ தற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி யாக திமுக செயல்படும் என்றும் சொல்லி யிருந்தேன். </p><p>நிலையான ஆட்சியே எனது விருப்பம்! அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடி வெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத் தார்கள். </p><p>அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெ டுப்பேன்” எனத் தெரிவித்தேன். </p><p>ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். </p><p>என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர் களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழி வகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. </p><p>தலைவர்களின் தோழமை உணர்வை வரவேற்கிறேன்! எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆத ரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படை யில் தி.மு.க. தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கி றோம்” என்று அறிவித்திருப்பதை நான் வர வேற்கிறேன்.</p><p> கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை.</p><p>ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. </p><p>அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காக வும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கை கோர்த்துப் போராடுவோம் என்று கம்யூ னிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள் கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டு கிறது. </p><p>5 ஆண்டுகளில் தமிழகத்தை வளப்படுத்தி இருக்கிறோம் இந்நேரத்தில் மிக முக்கியமான சோத னைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரி யர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜய காந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோ தரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ் சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கி றேன். </p><p>அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். </p><p>கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ் நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப் படுத்தியிருக்கிறோம்.</p><p> ஏராளமான திட்டங்க ளின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள் ளோம். </p><p>திமுக அரசின் திட்டங்களை தொடர வேண்டும் தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். </p><p>மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை கள் தொடரும்; மாநிலமும் வளரும். இத னைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p> அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள் ளார்.</p>
