1,000 மினி பேருந்துகள், ரூ.10,000 கோடி டெக் பார்க்: சென்னைக்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வாக்குறுதிகள்!
19 Apr 2026, 2:01 pm
<p>சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக "சென்னை சூப்பர்-6" எனும் பிரத்யேக தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.</p><p><br></p><p>சென்னை சூப்பர் 6 திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்:</p><p><strong>1.மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்</strong></p><p>நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.</p><p>மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.</p><p>அனைத்து குடியிருப்புக் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.</p><p>கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவமான உலகத்தரம் வாய்ந்த கலாச்சார மையம் அமைக்கப்படும்.</p><p><strong>2.சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து</strong></p><p>பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.</p><p>போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><strong>3.திட்டமிட்ட கால அளவில் உள்கட்டமைப்புத் திட்டங்கள்</strong></p><p>எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10-க்கும் மேற்பட்ட முக்கியத் திட்டங்கள் 2027-க்குள் முடிக்கப்படும்.</p><p>மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028-க்குள் முடிக்கப்படும்.</p><p>மழைநீர் வடிகால்கள் 2028-க்குள் முடிக்கப்படும்.</p><p>பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027-க்குள் முடிக்கப்படும்.</p><p>அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029-க்குள் அமைக்கப்படும்.</p><p><strong>4.மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு</strong></p><p>விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.</p><p>தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.</p><p><strong>5.உலகளாவிய சிறப்பு மையம்</strong></p><p>AI, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologies-க்கான சிறப்பு மையம்.</p><p>₹10 ஆயிரம் கோடி முதலீடு.</p><p>20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்.</p><p><strong>6.உலகளாவிய திறப்பு மையம் </strong>(Global Talent Gateway)</p><p>உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு.</p><p>உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி.</p><p>ஆராய்ச்சி மையம்.</p><p>அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்.</p><p><br></p><p>முன்னதாக, மாநிலம் முழுவதற்குமான பொதுவான தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் கூப்பன் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
