தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உரிமைகளை அடகு வைத்த அதிமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! தென்காசி, விருதுநகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்

6 Apr 2026, 5:30 am
உரிமைகளை அடகு வைத்த அதிமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! தென்காசி, விருதுநகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்
<p><strong>உரிமைகளை அடகு வைத்த அதிமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! தென்காசி, விருதுநகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்</strong></p><p>தென்காசி/விருதுநகர், ஏப். 3 - தமிழ்நாட்டின் மொழிவழிக் கொள்கையைத் திணிக்கத் துடிக்கும் பாஜகவின் முகமூடி ஒரு போதும் பலிக்காது என்றும், மாநில உரிமைகளை அடகு வைத்த அதிமுகவிற்கு மக்கள் இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழங்கினார்.</p><p>விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டத் சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய அவர், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்ததுடன், அதிமுகவின் துரோக அரசியலையும் அம்பலப்படுத்தினார்.</p><p>சங்கரன்கோவிலில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டினார். &#39;தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று பாஜகவின் தேர்தல் செய்யறிக்கை கூறுகிறது. இது எதை உணர்த்துகிறது? மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் பாஜகவின் சதித்திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பது அவமானம்&#39; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.