தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதி திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தி

13 May 2026, 12:12 am
சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதி திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தி
<p><strong>சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதி திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தி</strong></p><p>திருவில்லிபுத்தூர், மே 12- திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோ கம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். </p><p>திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. </p><p>இப்பகுதி களுக்கு செண்பகத்தோப்பு அருகே உள்ள பேயனாற்றுப் படுகையில் அமைக்கப் பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பெரிய கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப் பட்டு விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. </p><p>மேலும், நீராதார பற்றாக்குறையை சமா ளிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்டமும் செயல் படுத்தப்பட்டது. </p><p>இந்த திட்டத்தின் மூலம் தின மும் 58 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க வேண்டிய நிலையில், நிர்வாக குறைபாடு கள் காரணமாக குறைந்த அளவிலேயே தண்ணீர் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். </p><p>இதனுடன், பேயனாற்றுப் படுகை யிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால், தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடை பெறுவதாக கூறப்படுகிறது.</p><p> கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெண்கள், முதியவர்கள், பொது மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். </p><p>இந்த பிரச்சனை குறித்து பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலமுறை நகராட்சி ஆணையாளர் மற்றும் குடிநீர் விநியோக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> இந்நிலையில், புதிய அரசு பொறுப் பேற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் உறுதி செய்ய வேண் டும் என்றும், தவறும் உள்ளாட்சி நிர்வா கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். </p><p>இதையடுத்து திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.