தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது’ விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க வாழ்த்து

10 May 2026, 8:45 pm
‘தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது’ விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க வாழ்த்து
<p><strong>‘தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது’ விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க வாழ்த்து</strong> </p><p>கொழும்பு, மே 10- தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p> தமிழகமும் இலங்கையும் ஆழமான வரலாற்று மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். </p><p>இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள், மேலும் பொருளாதார செழிப்புக்காக தமிழகத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் திசநாயக்க கூறியுள்ளார். </p><p>இலங்கையின் பிரதான தமிழ்ச் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><p>அவர் ஓர் அறிக்கையில், இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 18 சதவிகிதம் பேர் தமிழர்கள் (இலங்கை தமிழர்கள் 13%, இந்திய தமிழர்கள் 5%) என்றும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் அவர்களு டனான உறவுகள் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.