முந்தய பக்கம்

இலங்கை சிறைக் கலவரத்தில் 25 பேர் உயிரிழப்பு!

6 Jul 2026, 3:29 pm
இலங்கை சிறைக் கலவரத்தில் 25 பேர் உயிரிழப்பு!
<p>இலங்கையில் உள்ள நீர்கொழும்பு சிறையில் கைதிகள் இடையே வெடித்த கலவரத்தில் 5 காவலர்கள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். </p><p>இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்பு ​சிறை​யில், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கூறப்படும் விவகாரத்தில் கைதிகள் இரு குழுவினருக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. மோதல் காரணமாக சிறைக்குள் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இதை தொடர்ந்து இன்று மீண்டும் தீவிரமடைந்த மோதலில், 5 காவலர்கள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமந்துள்ளனர்.</p><p>நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து பிரத்யேக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram