இலங்கை வெள்ளம்: பலி எண்ணிக்கை 193ஆக உயர்வு
30 Nov 2025, 3:38 pm
<p><strong>இலங்கை வெள்ளம்: பலி எண்ணிக்கை 193ஆக உயர்வு</strong></p>
<p>கொழும்பு இலங்கையில் டிட்வா புயல் தாக்கத்தால் கன மழை, வெள்ளம், நிலச் சரிவு, சூறைக்காற்று காரணமாக இதுவரை 193 பேர் உயிரிழந்துள் ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயி ரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுதொடர்பாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கையில் கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரை மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரி ழந்தோர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. 228 பேர் வெள் ளத்தில் மாயமாகியுள்ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
