முந்தய பக்கம்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

15 Dec 2025, 2:48 pm
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
<p><strong>விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி</strong></p> <p>திருப்பூர், டிச.15- திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி, விஷ்வாஷ் மஹாலில் டாக்டர். கலைஞர் விளையாட்டு உப கரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி &nbsp;மற்றும் பேரூராட்சி வார்டுகளுக்கு விளையாட்டு உபகரணங் கள் அடங்கிய 725 தொகுப்புகளை தமிழ் வளர்ச்சி மற்றும் &nbsp;செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் வழங்கினர். &nbsp;தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் &nbsp;திங்களன்று சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு &nbsp;அரங்கிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நகர்புற உள் ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரங் கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 7 &nbsp;நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ள 440 வார்டுக ளுக்கும் இரண்டாம் கட்டமாக இன்று டாக்டர் கலைஞர் &nbsp;விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் &nbsp; திருப்பூர் மாநகராட்சிக்கு 180 &nbsp;தொகுப்புகள், 07 நகராட்சிக ளுக்கு 330 தொகுப்புகள் 14 பேரூராட்சிகளுக்கு 215 தொகுப்பு கள் என மொத்தம் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய &nbsp;725 தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வளரச்சி மற்றும் &nbsp;செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே &nbsp;திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் &nbsp;மண்டலத் தலைவர் இல.பத்ம நாபன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த &nbsp;அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram