தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

12 Nov 2025, 3:20 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
<p><strong>கூட்டுறவுத் துறை பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்</strong></p> <p>திருப்பூர் , நவ.12- கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக் கான விளையாட்டுப் போட்டிகள் புதனன்று நடைபெற்றது. இதில், 140 பேர் பங்கேற்றனர். அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் &nbsp;கல்லூரியில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்ட விளையாட்டு &nbsp;மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் திருப்பூர் மாவட்ட கூட்டு றவுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதனன்று நடைபெற்றது. கபாடி, &nbsp;கைப்பந்து, இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிக ளில் தாராபுரம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், பல்ல டம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 140 அலு வலர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு &nbsp;வெற்றி பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டுறவு வார விழாவில் பரிசு கள் வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p><strong>மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சைகை மொழிப் பயிற்சி</strong></p> <p>திருப்பூர், நவ.12- திருப்பூர் மாநகராட்சி நொய்யல் வீதியில் உள்ள மாநக ராட்சி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை &nbsp;பயிலும் மாணவ, மாணவிகளுக்கு யூடியூபில் வீடியோ ஒளிப ரப்பு மூலம் சைகை மொழிப் பாடங்கள் செவ்வாயன்று கற்பிக் கப்பட்டது. அரசு பள்ளிகளில் படிக்கும், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, &nbsp;மாணவியருக்கு கல்வி கற்பிப்பதற்காகவும், அவர்க ளோடு சக மாணவர்கள் சகஜமாக கலந்துரையாட ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாநில இயக்ககம் சார்பில் &nbsp;அரை &nbsp;மணி நேர சைகை மொழி காணொளியாக தயாரிக்கப்பட்டு உள்ளன. கல்வி தொலைக்காட்சியில் இதை ஒளிபரப்பவும், &nbsp;மாணவ, மாணவிகளை காணச் செய்யும் வகையில் மாவட்ட &nbsp;முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டி ருந்தது. அதன்படி செவ்வாயன்று முதல் இந்த பயிற்சி &nbsp;அனைத்து அரசு பள்ளிகளிலும் துவங்கியது. காலை 11 மணி &nbsp;மற்றும் மாலை 5 மணி என இரு முறை ஒளிபரப்பப்படு கின்றன. இதில், ஆங்கில எழுத்துக்கள், &nbsp;எண்கள், வார நாட் கள், நிறங்கள், வாழ்த்துகள், மாதங்கள், உணவுப் பொருட் கள், குடும்ப உறுப்பினர்கள், நடத்தைகள், வெளிப்பாடுகள் &nbsp;உள்ளிட்ட பாடங்கள் காணொளியாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்த்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட, மாணவ மாணவியருக்கு கற்பிக்கலாம். அந்த வகையில் திருப்பூரில் நொய்யல் வீதியில் உள்ள &nbsp;மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை &nbsp;பயிலும் மாணவ, மாணவிகளுக்கு யூடியூபில் வீடியோ &nbsp;ஒளிபரப்பு மூலம் சைகை மொழிப்பாடங்கள் கற்பிக்கப்பட்டது. &nbsp;வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகள் திரையில் காண்பிக்கப் படும் படங்களுக்கு ஏற்ப, திரையில் தோன்றுபவர் பேசும் மற்றும் காட்டும் சைகைகளுக்கு ஏற்றவாறு தங்களது உடல் &nbsp;மொழிகளை அசைத்து சைகை மொழியை பயின்றனர். சிறப்பு குழந்தைகள் மட்டுமின்றி மற்ற குழந்தைக ளும் இந்த சைகை மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் சிறப்பு குழந்தைகளுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். &nbsp;உரையாட முடியும், நட்பு பாராட்ட முடியும் என்பதால் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. செவ்வாயன்று துவங்கிய இந்த பயிற்சி ஜன வரி மாதம் வரை நடத்தப்படவுள்ளதாக ஆசிரியர்கள் தெரி வித்தனர்.</p> <p><strong>சலீம் அலி பிறந்தநாள்: பறவைகள் விழிப்புணர்வு கருத்தரங்கம்</strong></p> <p>திருப்பூர், நவ.12 - பறவைகள் ஆய்வாளர் சலீம் அலி பிறந்த தினத்தை முன் னிட்டு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் பறவைகள் விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு - 2 சார்பாக புதனன்று கல்லூரி வளாகத்தி லுள்ள கலாம் கனவு பூங்காவில் பறவை மனிதர் சலீம் அலியின் &nbsp;பிறந்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது. மாணவ பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை ஏற்க, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். &nbsp;அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உரையாற்றி னார். இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி, முறையான &nbsp;பறவை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்திய முதல் இந் தியர். பறவைகள் இல்லையேல் &nbsp;மனிதர்கள் இல்லை, பறவை கள் தங்கள் எச்சங்களின் மூலமாக காடுகளை உருவாக்கி பல் லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கின்றன. பறவைகள், விளைச் சலை பாதிக்கும் பூச்சிகளை உண்டு பயிரின் மகசூலை அதிக ரிக்கிறது. ஆகையால் அனைவரும் &nbsp;பறவைகளை நேசித்து, &nbsp;அவைகளை பாதுகாக்கும் முயற்சிகளையும், விழிப்புணர் வையும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். மாணவ செய லர்கள் செர்லின், ரேவதி, நவீன்குமார், பிரவீன் ஆகியோர் &nbsp;தலைமையில் கல்லூரி வளாகத்தில் பறவை நோக்கலில் ஈடு பட்டனர், பிறகு பறவைகளை நேசிப்போம், &nbsp;பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் ஏராள மான மாணவ மாணவிகள் &nbsp;கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.