தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

3 Jan 2026, 2:20 pm
கோயம்புத்தூர் முக்கிய  செய்திகள்
<p><strong>சிறப்பு ரயில்கள்: இன்று முன்பதிவு துவக்கம்</strong></p> <p>திருப்பூர், ஜன.3- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு, &nbsp;திருப்பூர், &nbsp;கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கு, &nbsp;இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது என தெற்கு ரயில்வே &nbsp;நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள &nbsp;செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை, திருப்பூர், &nbsp;ஈரோடு வழியாக சென்னை செல்லக்கூடிய வகையில் சிறப்பு &nbsp;ரயில்கள் இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் &nbsp;ஜன.11 மற்றும் ஜன.18 ஆம் தேதிகளில் கோவையில் இருந்து &nbsp;சென்னைக்கு (06034) &nbsp;இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் &nbsp;காலை 9:50 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் திருப்பூரில் &nbsp;12 ஆம் தேதி அதிகாலை 12:10 மணிக்கும், ஈரோட்டில் 1:12 மணிக்கும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;சென்னையில் இருந்து கோவைக்கு (06033) ஜன.12 மற் றும் ஜன.19 ஆம் தேதிகளில் இரவு 11:25 மணிக்கு சென்னை யில் புறப்பட்டு மறுநாள் காலை 9:00 மணிக்கு கோவை வந்த டைகிறது. இந்த ரயில் &nbsp;அதிகாலை &nbsp; காலை 6:05 &nbsp;மணிக்கு ஈரோட் டில், 7:00 மணிக்கு திருப்பூரில் நின்று செல்லும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இதேபோல் போத்தனூரில் இருந்து சென் னைக்கு திருப்பூர், &nbsp;ஈரோடு மார்க்கமாக ஜன.14 மற்றும் &nbsp;ஜன.21 ஆம் தேதிகளிலும், மங்களூரிலிருந்து சென்னைக்கு &nbsp;கோவை, திருப்பூர், &nbsp;ஈரோடு மார்க்கமாக ஜன.13 ஆம் தேதியும் &nbsp;சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் &nbsp;சென்னை போத்தனூர் இடையே ஜன.14 மற்றும் &nbsp;ஜன.21 ஆம் தேதிகளிலும், சென்னை மங்களூர் இடையே 14 &nbsp;ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிறு) காலை 8:00 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.</p> <p><strong>கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் கட்டுமானப் பணி முதல்வர் தொடக்கி வைத்தார் </strong></p> <p>திருப்பூர், ஜன.3 - திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ரூ.6.34 கோடி மதிப் பீட்டில் திருமாழிகை மண்டபம் கட்டும் பணியை தமிழக &nbsp;முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தி லிருந்து காணொலிகாட்சி வாயிலாக சனியன்று திறந்து வைத் தார். கோயில் வளாகத்தில் இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி &nbsp;மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொண்டத்து காளியம்மன் கோயிலில் ரூ. 6.34 கோடி மதிப் பீட்டில் செதுக்கப்பட்ட கற்களைப் பயன்படுத்தி திருமாழிகை &nbsp;மண்டபம் கட்டப்படவுள்ளது. ராஜ கோபுரம் முதல் நிலை ரூ.2.43 கோடி, இரண்டாம் நிலை ரூ.18 லட்சம், மூன்றாம் நிலை &nbsp;ரூ.16 லட்சம், நான்காம் நிலை ரூ.14 லட்சம், ஐந்தாம் நிலை &nbsp;ரூ.12 லட்சம், கோயில் உள்பிரகார வடக்கு முகம் மதில் &nbsp;சுவர் ரூ.28 லட்சம், கிழக்கு முகம் ரூ.35 லட்சம், தெற்கு முகம் &nbsp;ரூ.35 லட்சம், மேற்கு முகம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப டவுள்ளது. மேலும், கன்னிமூலை விநாயகர் சன்னதி ரூ.23.50 லட்சம், &nbsp;முத்துக்குமாரசாமி ஏகதல விமானம் ரூ.24.75 லட்சம், வசந்த &nbsp;மண்டபம் ரூ.2.42 கோடி, கன்னிமார் சன்னதி ரூ.2.50 லட்சம், &nbsp;திருமடப்பள்ளி ரூ.3.50 லட்சம், உள் கல்தரைதளம் அமைப்பு &nbsp;ரூ.50 லட்சம், கோயில் வெளிப்பிரகார மதில் சுவர் பூசுதல் வர் ணம் அடித்தல் ரூ.32.50 லட்சம், பொங்கல் வைக்கும் மண்ட பம் ரூ.14.50 லட்சம், குண்டம் இறங்குவோருக்கான இளைப் பாறும் மண்டபம் ரூ.1.10 கோடி, தீப ஸ்தம்பம் மற்றும் குறிஞ்சி &nbsp;மண்டப கல்காரப்பணி ரூ.12.50 லட்சம், பொருட்கள் பாது காப்பு அறை ரூ.14.50 லட்சம், மின்சார பாதுகாப்பு அறை &nbsp;ரூ.6.75 லட்சம், முடி காணிக்கை செலுத்தும் இடம் ரூ.10.50 &nbsp;லட்சம் என மொத்தம் ரூ.6.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ளதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p> <p><strong>துரித உணவு, கேக் தயாரிக்க பயிற்சி</strong></p> <p>திருப்பூர், ஜன. 3 - திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி &nbsp; &nbsp;நிலையத்தில் துரித உணவு, தினை மற்றும் கேக் பொருட்கள் &nbsp;தயாரிப்புக்கு 12 நாள் முழு நேரப்பயிற்சி ஜனவரி 7 அன்று நடை பெறவுள்ளது. எழுத படிக்க தெரிந்த,18 முதல் 45 வயதுக்குட் பட்ட, &nbsp;இருபாலரும் &nbsp; &nbsp;விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் &nbsp;கட்டணமும் இல்லை. இரு பாலருக்கும் தனித்தனி தங்கும் &nbsp;விடுதி வசதி உள்ளது. உணவு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சிக்கு விண்ணப்பிக்க &ldquo;கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி1, வஞ்சியம்மன் கோவில் &nbsp;எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கேயம் சாலை, திருப்பூர் &nbsp;என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும். கூடுதல் விவரங்க ளுக்கு தொலைபேசி: 9489043923, 9080442586, 9952518441, 8610 533436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி &nbsp;நிலைய இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.</p> <p><strong>ஜன.9 விவசாயிகள் குறைதீர் கூட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன.3- திருப்பூர் வருவாய் கோட் டத்தில் கோட்ட அளவிலான &nbsp;விவசாயிகள் குறை தீர்க்கும் &nbsp;நாள் கூட்டம் ஜன.9 தேதி 11 &nbsp;மணிக்கு திருப்பூர் மாவட் டம், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறவுள்ளது. இந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ் தெரிவித்துள் ளார்.</p> <p><strong>நடக்க இருப்பவை</strong></p> <p>திருப்பூர் &nbsp;வாசகர் சிந்தனைப் பேரவை நூல் அறிமுகம் 36 ஆம் நிகழ்வு 4.01.2025, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி கே.வி.டிரான்ஸ்போர்ட் ஏவிபி மெயின்ரோடு, அங்கேரிபாளையம், திருப்பூர் சமூக ஜனநாயகக் கையேடு நூலை அறிமுகப்படுத்தி உரை: பேராசிரியர் வ.கிருஷ்ணன் (முதல்வர், சிக்கண்ணா கல்லூரி) ஏற்புரை: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப்பள்ளிக்கான மாநில மேடை)</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.