மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
24 Feb 2026, 3:55 pm
<p><strong>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி</strong></p>
<p>திருப்பூர், பிப்.24- 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கு தேர்வு எழுத உத வும், ஆசிரியர்களுக்கு செவ் வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 2025-26ம் கல்வியாண்டிற் கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2 மற்றும் 11 ஆம் தேதிகளில் துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 மையங்க ளில் 26,461 பேர் எழுத உள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 104 மையங்களில் 29,044 பேர் எழுத உள்ளனர். பொதுத்தேர்வை எழுத உள்ள மாற்றுத் திறனாளிகள் உட்பட உடல் பாதிப்பு காரணமாக சுயமாக தேர்வு எழுத முடியாதவர்களுக்கு சொல்வதை எழுத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கான சிறப்பு பயிற்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆசி ரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பாபி இந்திரா தேர்வு எழுதும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பில் சுயமாக தேர்வு எழுத முடியாதவர்க ளாக 116 பேர் உள்ளனர்.</p>
