தமுஎகச மாநில மாநாட்டில் சிறப்பு கண்காட்சிகள் திறப்பு விழா!
5 Dec 2025, 4:21 pm
<p><strong>தமுஎகச மாநில மாநாட்டில் சிறப்பு கண்காட்சிகள் திறப்பு விழா!</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.5- தஞ்சாவூரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 16 ஆவது மாநில மாநாட்டையொட்டி, வெள்ளியன்று பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவைக்கப்பட்டன. தமுஎகசவின் 50 ஆண்டு கால வரலாற்றை விளக்கும் கண்காட்சியை, சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரும், மூத்த எழுத்தாளருமான எஸ்.ஏ.பெருமாள் திறந்து வைத்தார். * சிந்துவெளி நூற்றாண்டு கண்காட்சி: தஞ்சாவூர் ‘பாம்பே ஸ்வீட்’ உரிமையாளர் சுப்பிரமணிய சர்மா திறந்து வைத்தார். * தஞ்சையின் புவிசார் குறியீட்டு பொருட்கள் கண்காட்சி: திரைப்படக் கலைஞர் துரை.சுதாகர் திறந்து வைத்தார். * பாரதி புத்தகாலய கண்காட்சி: ‘பாரத் கல்வி குழுமச் செயலாளர்’ கல்வியாளர் புனிதா கணேசன் திறந்து வைத்தார். * நாட்டுப்புறக் கருவிகள் கண்காட்சி: தமிழ்ப் பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் (ஓய்வு) முனைவர் இரா.குணசேகரன் திறந்து வைத்தார். * எல்.ஐ.சி. கண்காட்சி அரங்கு: தஞ்சாவூர் கோட்ட முதுநிலை மேலாளர் விஷ்ணுதேவ் திறந்து வைத்தார். முன்னோடிகளுக்கு அஞ்சலி கண்காட்சி திறப்பு விழாவைத் தொடர்ந்து, மறைந்த தமுஎகச முன்னோடிகளுக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். மாநாட்டில் திரளானோர் கலந்துகொண்டு கண்காட்சிகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட னர்.</p>
