முந்தய பக்கம்

எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது நடந்த 54 நியமனங்கள் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம்

14 Jul 2026, 1:03 pm
எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது நடந்த 54 நியமனங்கள் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம்
<p>முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது மேற்கொண்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனங்களை சட்டவிரோதம் எனக் கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சிக்கு 54 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களை ஒரே நாளில் விளம்பரப்படுத்தி அந்த நாளிலேயே நேர்காணல் வைத்து ஆட்கள் சேர்க்கப்பட்டதாகவும் இதில் கடுமையான விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தது.</p><p>இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதன் மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.</p><p>விசாரணை முடிவில் 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் சட்டவிரோதம் இருப்பதாகவும் விதிமுறைகள் மீறல் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாகவும் கூறி அவர்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்த பணியிடங்கள் பணம் பெற்றுக் கொண்டு நிரப்பப்பட்டதாக ஒரு புறம் புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது</p>
Share
FacebookXWhatsAppTelegram