கேரளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தென்மேற்கு பருவமழை
1 Jun 2026, 9:24 pm
<p><strong>கேரளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தென்மேற்கு பருவமழை</strong></p><p>திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை என்பது இந்தியாவிற்கு மிக முக்கியமான, அதிக மழையைத் தரும் முதன்மை மழைக்காலமாகும். நாட்டின் ஒட்டுமொத்த வருடாந்திர மழை யளவில் சுமார் 70% முதல் 80% வரை தென்மேற்கு பருவமழை யின் மூலமே கிடைக்கிறது. </p><p>இந்த பருவமழை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். </p><p>இந்நிலையில், இந்த ஆண்டுக் கான தென்மேற்கு பருவமழை ஜூன் 1 அன்று கேரள கடற்கரை யை கடந்து, இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. </p><p>கேரளம், தமிழ் நாடு, கர்நாடகா வழியாக முன் னேறி, ஜூலை நடுப்பகுதிக்குள் ஒட்டுமொத்த இந்தியாவையும் தென்மேற்கு பருவமழை பலத்த மழையுடன் ஆக்கிரமிக்கும். </p><p> தென்மேற்கு பருவமழையும், நகர்வும் ஜூன் 5-க்குள் : தென்னக தீப கற்பம் (தமிழ்நாடு, கர்நாடகா, ஆந் திரா, தெலுங்கானா, கோவா), வடகிழக்கு ஜூன் 10 அல்லது ஜூன் 15-க்குள் : மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் பரவத் தொடங்கு கிறது.</p><p>ஜூன் 20 அல்லது ஜூன் 25-க்குள் : மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், குஜராத், கிழக்கு உத் தரப்பிரதேசம் ஆகியவற்றின் பெரும் பகுதிகளுக்கு முன்னேறு கிறது. </p><p>ஜூன் மாத பிற்பகுதியிலும் ஜூலை மாத தொடக்கத்திலும் தென் மேற்கு பருவமழை தில்லி, ஹரி யானா, பஞ்சாப், ராஜஸ்தான், வட மேற்கு இந்தியாவின் பிற பகுதி களை பலத்த கனமழையுடன் மிரட் டும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
