தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறப்பு ரயில்கள் மூலம் புதிய சாதனை! இந்திய அளவில் தெற்கு ரயில்வே முதலிடம்

28 Jun 2026, 9:59 pm
சிறப்பு ரயில்கள் மூலம் புதிய சாதனை!  இந்திய அளவில் தெற்கு ரயில்வே முதலிடம்
<p><strong>சிறப்பு ரயில்கள் மூலம் புதிய சாதனை! இந்திய அளவில் தெற்கு ரயில்வே முதலிடம்</strong></p><p>சென்னை, ஜூன் 28 - சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.243 கோடி வசூல் செய்து தெற்கு ரயில்வே இந்திய அள வில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2025-26 ஆண்டில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில் களில், இந்தியாவிலேயே மிக அதிகமான மக்கள் தெற்கு ரயில்வேயில்தான் பயணம் செய்துள்ளனர். பண் டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்ட நெரி சலைக் குறைக்க தெற்கு ரயில்வே செய்த நல்ல திட்ட மிடல் இந்த வெற்றிக்கு காரணம். கடந்த ஆண்டில் 229 சிறப்பு ரயில்கள் மூலம் மொத்தம் 2,513 முறை முன்பதிவு ரயில் சேவைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 32.98 லட்சம் மக்கள் பயணம் செய்துள்ளனர். ரயில்வே துறைக்கு ரூ.243.22 கோடி வருமானம் கிடைத் துள்ளது. இதுதவிர, சாதா ரண டிக்கெட் கட்டணத்தில் 1,762 பொதுப்பெட்டி சிறப்பு ரயில்களும் இயக்கப் பட்டன. இந்தச் சிறப்பு ரயில்களில் ஒரு முறைக்கு சராசரியாக 1,312 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆனால் இந்திய ரயில் வேயின் பொதுவான கணக்குப்படி ஒரு ரயிலில் 894 பேர் மட்டுமே பயணம் செய்கிறார்கள். இதனால் இந்தியாவிலேயே மிகச் சிறந்த ரயில்வே மண்டல மாக தெற்கு ரயில்வே முத லிடம் பிடித்துள்ளது. தமிழ் நாடு, கேரளம், பெங்களூரு, ஆந்திரா போன்ற மக்கள் அதிகம் செல்லும் முக்கிய ஊர்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை - கன்னியா குமரி, சென்னை - திருவனந்த புரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் சாதாரண ரயில் களில் டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மக்களுக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படும் போது அதுகுறித்த தகவல் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்பட் டது. இதனால் மக்கள் உடனே சிறப்பு ரயிலில் டிக்கெட் எடுத்து, தங்களின் பயணத்தை எளிதாக்கிக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.