கல்லல் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதை கண்டித்து கடையடைப்பு- மறியல்
19 Dec 2025, 6:05 pm
<p><strong>கல்லல் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதை கண்டித்து கடையடைப்பு- மறியல்</strong></p>
<p>சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கல்லல் கிராம பொதுமக்களின் விருப்பத்தி ற்கு மாறாகவும்.. ஊராட்சியிலோ, கிராமசபா கூட்டத்திலோ தீர்மானம் நிறைவேற்றாமல் கல்லல் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதை கண்டித்தும் கல்லலை பேரூராட்சியாக தரம் உயர்த்தக்கோரியும் டிசம்பர் 19 அன்று முழு கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சக்திவேல் முருகேசன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர். வர்த்தகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டன. </p>
