தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மத்தியப்பிரதேசத்தில் புலிகள் உயிரிழப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

17 Dec 2025, 9:46 am
மத்தியப்பிரதேசத்தில் புலிகள் உயிரிழப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
<p>இந்தியாவின் &ldquo;புலி மாநிலம்&rdquo; என அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், புலி பாதுகாப்பு குறித்து கடும் கவலை எழுந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் 54 புலிகள் உயிரிழந்துள்ளன. 1973ல் &lsquo;பிராஜெக்ட் டைகர்&rsquo; தொடங்கியதிலிருந்து ஒரே ஆண்டில் இவ்வளவு அதிக புலி மரணங்கள் பதிவானது இதுவே முதல் முறை.<br /> 2021 - 34, 2022இ - 43, 2023 - 45, 2024 - 46, மற்றும் 2025ஆம் ஆண்டு இன்னும் முடிவடையாத நிலையில் தற்போதுவரை 54 புலிகள் உயிரிழந்துள்ளன.<br /> கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 புலிகள் மரணமடைந்துள்ளன. சமீபத்தில் பந்தவ்கர் புலி காப்பகத்தில் ஒரு புலி சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, உயிரிழந்த புலிகளில் சுமார் 57 சதவீதம் &lsquo;இயற்கைக்கு மாறான காரணங்களால்&rsquo;(வேட்டையாடல், மின்சாரம் தாக்குதல்) உயிரிழந்துள்ளன.<br /> வேட்டைக்காரர்கள் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழைந்து செயல்படுவதாகவும், கண்காணிப்பு அமைப்புகள் பலவீனமாக இருப்பதாகவும் வனவிலங்கு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலின் முக்கிய நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருப்பது, மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.<br /> விமர்சனங்களுக்கு பதிலளித்து வனத்துறை சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், &ldquo;இதுவே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக புலி மரணங்கள் பதிவான ஆண்டு&rdquo; என்பதே, உடனடி மற்றும் தீவிர நடவடிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.