பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு எதிர்ப்பு மதுரையில் மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
9 May 2026, 9:11 pm
<p><strong>பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு எதிர்ப்பு மதுரையில் மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>மதுரை, மே 9- மதுரை மாநகர் மற்றும் புற நகர் இந்திய மாணவர் சங்கம் சார் பில் பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. </p><p>தமிழ்நாட்டில் தொடர்ந்து நடை பெற்ற போராட்டங்களால் அமல் படுத்தப்படாமல் தடுத்து நிறுத்தப் பட்டிருந்த பி.எம். ஸ்ரீ திட்டத்தை, தேர்தல் முடிவுகள் வெளியான 2 நாட்களுக்குள் அவசரமாக செயல் படுத்த ஒன்றிய அரசு முயற்சி மேற் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>மேலும், புதிதாக அமையவிருக்கும் தமிழக அர சுக்கு அழுத்தம் கொடுக்கும் வகை யில், இத்திட்டத்திற்கு உடனடி ஒப்பு தல் வழங்குமாறு ஒன்றிய அரசு கடி தம் அனுப்பியுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது. </p><p>இதனை கண்டித்து, இத்திட் டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை மதுரை குரு தியேட்டர் எதிரில், பெத்தானியாபுரத்தில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் குழுக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். </p><p>ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்டத் தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார்.</p><p> மாநகர் மாவட்டத் தலைவர் டீலன் ஜெஸ்டின் மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர் சுதர்சனன் கண்டன உரையாற்றினர். </p><p>நிறை வாக மாநகர் மாவட்டச் செயலா ளர் டேவிட் ராஜதுரை பேசினார். </p><p>இதில் மாநிலக் குழு உறுப்பினர் தீபலட்சுமி மற்றும் மாநகர், புற நகர் மாவட்டங்களின் நிர்வாகி கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
