தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஎம்ஸ்ரீ திட்டம்: ஒப்புதல் அளிக்க கட்டாயப்படுத்துவதா? இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம்!

9 May 2026, 2:12 am
பிஎம்ஸ்ரீ திட்டம்: ஒப்புதல் அளிக்க கட்டாயப்படுத்துவதா? இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம்!
<p><strong>பிஎம்ஸ்ரீ திட்டம்: ஒப்புதல் அளிக்க கட்டாயப்படுத்துவதா? இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம்!</strong></p><p>சேலம், மே 8- ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி யும், தேசிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் தழு விய நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். </p><p>ஒன்றிய அரசின் நேரடி நிதியுத வியுடன் நாடு முழுவதும் 14, 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிஎம்ஸ்ரீ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. </p><p>இத்திட்டத்தில் கூறப்பட் டுள்ள தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாடு என்பது, மாணவர்களை மீண்டும் அவர்களின் பாரம்பரிய சாதியத் தொழில்களுக்கே தள் ளும் ’குலக்கல்வி’ முறையை மறை முகமாக புகுத்தும் முயற்சியா கும். </p><p>இத்திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக ளுக்கு தேவையற்ற முக்கியத்து வம் அளிக்கப்படுவதாகவும், இது மாநில மொழிகளின் உரிமைக ளைப் பறித்து ’மும்மொழிக் கொள் கையை’ திணிக்கும் செயல் என் றும் மாணவர்கள் சாடினர். </p><p>கல்வி பொதுப்பட்டியலில் உள்ள நிலை யில், மாநில அரசின் பள்ளிகளை தன்னிச்சையாக தனது கொள் கைக்கு கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயல்வது கூட்டாட்சித் தத்துவத் திற்கு எதிரானது. </p><p>இத்திட்டத்தில் இணைய ஒப்பு தல் வழங்காத தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்து அழுத்தம் கொடுப் பது கண்டிக்கத்தக்கது. </p><p>இரு மாநில தலைமை செயலாளர்களும் 48 மணி நேரத்திற்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண் டும் என ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத் தில் ஈடுபட்டனர்.</p><p>ஒன்றிய அரசின் ஏதேச்சதிகார போக்கை கண் டித்து, பிஎம்ஸ்ரீ திட்ட அரசாணை நகல்களை மாணவர்கள் தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். </p><p>கல்வி என்பது வர்ணா சிரம முறைக்கோ அல்லது குறிப் பிட்ட மொழிக்கோ சாதகமாக இருக் கக்கூடாது என முழக்கங்கள் எழுப் பப்பட்டன. </p><p>சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் டார்வின் தலைமை தாங்கினார். </p><p>இதில் சேலம் மாவட்டச் செயலாளர் பவித்ரன், தருமபுரி மாவட்டச் செய லாளர் ஸ்டாலின், மாவட்ட துணைத் தலைவர் கோகுல், செயற்குழு உறுப்பினர் ரிஷி உள்ளிட்ட ஏராள மான மாணவர்கள் கலந்து கொண் டனர்.</p><p> திருப்பூர் ஒன்றிய பாஜக அரசின் முடிவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளியன்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். </p><p>திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாணவர் சங்க நிர்வாகி காதர் தலைமை ஏற்றார். </p><p>சங்கத்தின் மாவட்டத் தலைவர் விமல் ராஜ், மாவட்டச் செயலாளர் மணிகண் டன் ஆகியோர் கண்டன உரையாற் றினர். </p><p>மாணவர் சங்கத்தின் நிர்வாகி கள் சுஜிதா, புனிதன், ஆனந்த், ரஜிதா, முகிலன், கலையரசன் உட் பட கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.